நீதி – உண்மை
உபநீதி – விழிப்புணர்வு
ஒரு பாதுகாப்புத் துறை அதிகாரி, புத்த சமயத்தின் ஜப்பானிய தியானமார்க்கத்தில் வல்லுனராக இருக்கும் ஹாக்வின் என்றவரிடம் ஒரு கேள்வி கேட்டார்,
சொர்க்கம் எங்கு இருக்கிறது? நரகம் எங்கு இருக்கிறது? அங்கு செல்வதற்கு வழி எங்கே?
அந்த பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு 2 விஷயங்கள் தான் தெரிந்திருந்தன: வாழ்க்கை மற்றும் மரணம். பெரிதாகத் தத்துவம் ஒன்றும் தெரியவில்லை; எப்படியாவது நரகத்திலிருந்து தப்பித்து சொர்க்கத்திற்குப் போகும் வழி மட்டும் தெரிய ஆவலாக இருந்தது. உடனே ஹாக்வின், அதிகாரிக்கு புரியும்படி பதிலளித்தார்.
“நீ யார்?” என்று ஹாக்வின் கேட்டார்.
நான் தான் பாதுகாப்புத் துறையின் அதிகாரி என்று பதிலளித்து விட்டுப் பேரரசர் என்னைப் புகழ்ந்து பேசுவார் என்றும் கூறினார்.
ஹாக்வின் சிரித்துக் கொண்டு, “நம்பவே முடியவில்லை. பார்ப்பதற்கு பிச்சைகாரன் போல இருக்கிறாயே” என்று சொன்னார்.
உடனே, மனவேதனையுடன் கர்வத்தில் தன் வாளை எடுத்து ஹாக்வினை கொலை செய்ய முயற்சித்தார். ஹாக்வின் உரக்கச் சிரித்தவாறு பேசத் தொடங்கினார். இது தான் நரகத்திற்கு வழி. கோபத்துடன் கையில் வாளை வைத்திருக்கிறாய். உனக்கு இருக்கும் அகங்காரம், நரகத்தின் வாயிற் கதவை இப்போது திறக்கும் என்றார்.
உடனே, பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு ஞானோதயம் வந்தது. வாளைத் தெரியாதபடி மறைத்தார். அதற்கு ஹாக்வின், “இப்போது சொர்க்கத்தின் வாயிற் கதவு திறக்கப் படும்” என்றார்.
நீதி:
சொர்க்கமும், நரகமும் நம்முள் இருக்கிறது. இது தான் உண்மை. வாயிற் கதவும் நம்முள் இருக்கிறது. அந்த விழிப்புணர்வு இல்லாவிட்டால், நரகத்தின் கதவு திறக்கும். நாம் கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருந்தால், சொர்க்கத்தின் கதவு திறக்கும். மனிதர்கள் சொர்க்கமும், நரகமும் எங்கேயோ வெளியில் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். நம் வாழ்க்கைக்குப் பிறகு அல்ல; நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுதே, நம் செயல்களுக்குத் தகுந்தாற் போல கதவுகள் திறக்கப் படும். நாம் எடுக்கும் ஒரு முடிவு தான் எல்லாவற்றிற்கும் காரணம். அதனால், எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி