நீதி: நற்பண்பு
உபநீதி: மரியாதை
ஒரு நாள், பிள்ளையாரும் அவரது தம்பி கார்த்திகேயரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குக் கடவுளிடமிருந்து ஒரு பழம் கிடைத்தது. குழந்தைகளாக இருந்ததனால், அவர்கள் அந்தப் பழத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்தனர். அதனால், அவர்களின் பெற்றோர்களாகிய சிவனும் பார்வதியும் அந்த வாதத்தைத் தீர்க்க முன் வந்தனர். அவர்கள், “யார் பிரபஞ்சத்தை முதலில் மூன்று முறை வலம் வருகிறார்களோ, அவர்களுக்கு இந்தப் பழம் கிடைக்கும்; இந்தப் பழம், அவர்களுக்கு ஒப்புயர்வற்ற ஞானத்தையும், என்றும் நிலைத்திருக்கும் புகழையும் அளிக்கும்” என்றனர்.
கார்த்திகேயன் உடனடியாக தனது வாகனமான மயிலின் மேல் ஏறி பிரபஞ்சத்தை வலம் வரக் கிளம்பி விட்டான்; ஆனால், அவனுடைய தம்பியோ என்ன செய்வது என்று தெரியாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். வாட்ட சாட்டமாக இருந்த கணேசன், தனது சிறிய வாகனமான எலியோடு எவ்வாறு வேகமாக பிரபஞ்சத்தை வலம் வருவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்; பறப்பதற்குச் சிறகுகள் கூட எலிக்கு இல்லையே என்ற யோசனையும் மனதில் இருந்தது.
பிறகு, தனது மெய்யறிவினால் கணேசன் ஒரு முடிவுக்கு வந்தான். தனது பெற்றோராகிய சிவனையும் பார்வதியையும் அணுகி, “ நீங்கள் தானே என்னுடைய பிரபஞ்சம். அப்போது, நான் உங்களை மூன்று முறை வலம் வந்தால், அது பிரபஞ்சத்தை சுற்றி வருவதற்குச் சமம் தானே?” என்று கூறி தனது பெற்றோரை மூன்று முறை வலம் வந்தான்.
கணேசன் அந்த போட்டியில் மட்டும் ஜெயிக்க வில்லை; தனது பெற்றோரின் அன்பையையும் வென்றான்.
நீதி:
ஒருவர் தனது மெய்யறிவை சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். பெற்றோர்களை மதித்து, வாழ்க்கையில் நமக்கு அவர்களை விட முக்கியமானவர்கள் எவருமே இல்லை என்பதை உணர வேண்டும்.
மொழி பெயர்ப்பு:
சுப்ரியா, சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com