நீதி – சரியான சிந்தனை
உபநீதி – பாகுபாடு / தேர்வுரிமை
நாம் அறிவுள்ள மற்றும் விவேகமுள்ள மனிதர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். வாழ்க்கையில் பல சமயங்களில், நமக்கு சரிவு ஏற்படும் போது, யாரோ ஒருவரின் வழிகாட்டுதலுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். நாம் எவரை நோக்கி செல்கிறோமோ, அவர் நமக்கு சரியான பாதையில் வழி நடத்த வேண்டும்.
மனித உடல் எப்போதாவது தளர்ச்சி அடைந்து விடும். நாம் விழும் போது, நமக்கு சரியான வழிகாட்டி தேவை. துரியோதனன் விழுந்த போது, அர்ஜுனனும் விழுந்தான். துரியோதனன் விழுந்த போது, சகுனி அவனுக்கு வழிகாட்டியாக இருந்தான்.
மன அழுத்தம் மற்றும் வேதனையுடன் நாம் இருக்கும் போது, யாருடன் பேசுவது என்று புரிவது இல்லை. குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் ஒருவனிடம் கேட்டால், அவன் குடிப்பது மட்டுமே தீர்வு என்பான். அவனுக்கு தெரிந்தது அது தான். ஆதலால் நாம் இருக்கும் இடத்திலிருந்து இன்னும் சற்று சரிந்து கீழே விழுவோம். அதே சூழ்நிலையில், மன அழுத்தத்தை தியானத்தின் மூலம் வெற்றியடைந்த ஒருவன், தியானம் மட்டுமே தீர்வு என்பான். இருவருமே உதவி செய்ய வேண்டும் என்று தான் நினைக்கின்றனர்; ஆனால், அவர்களுக்கு என்ன தெரியுமோ அதைத் தானே சொல்ல முடியும்.
நீ சகுனியாக இருந்தால், தீய விஷயங்களை சரியாக கையாளாமல், இன்னும் மோசமாக ஆகின்றாய். நீ கிருஷ்ணராக இருந்தால், அதே தீய விஷயங்களை சிறப்பாக சமாளித்து, நல்லவனாக மாறுகின்றாய்.
யாரை சார்ந்து இருக்கிறாய் என்பதைப் பொருத்து தான் நீ சரிவிலிருந்து சிறந்தவராக திகழப் போகிறாயா அல்லது இன்னும் மோசமாக ஆகப் போகிறாயா என்று தெரியும். யார் உன் வழிகாட்டி என்பது மிகவும் முக்கியம்.
நீதி:
பல சமயங்களில், நம் மனோபாவத்தில் சிதைவு ஏற்படும் போது, நமக்கு வாழ்க்கையில் ஒரு சரிவு ஏற்படலாம். நமக்கு எப்போது அந்த சரிவு ஏற்படும் என்பதை விட, அச்சமயத்தில் நாம் யாரை நோக்கி செல்வோம் என்பது தான் மிகப் பெரிய கேள்வி! அந்த சரிவிலிருந்து நம்மைப் காப்பாற்றி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் ஒருவரிடமா அல்லது இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் ஒருவனிடமா?
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி