நீதி – திட நம்பிக்கை, பற்றுறுதி
உபநீதி – விட்டு கொடுக்கும் மனப்பான்மை
நம்பிக்கை மற்றும் பக்தி, இரண்டுமே ஒரே மாதிரியான கருத்துகளை குறிக்க உபயோகப்படுத்தப் படுகின்றன. இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் “ஏதோ ஒன்றில் நம்பிக்கை வைப்பது” என்பதாகும்; ஆனால் ஒரு மெல்லிய கோடால் அர்த்தம் வேறுபடுகின்றது. பரந்த கண்ணோட்டத்தில், பக்தி என்பது பற்றுறுதியுடன் இருப்பது (மனிதன் அல்லது பொருளின் மேல்); நம்பிக்கை என்பது பூரண நம்பிக்கை மற்றும் தீவிர உறுதியுடன் இருப்பது.
பக்தி ஆன்மீக ரீதியில் பயன்படுத்தப் படுகின்றது; நம்பிக்கை உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப் படுகின்றது. வாழ்க்கையில் கஷ்டமான சூழ்நிலைகளில் இருக்கும் போது, நாம் கடவுளின் மேல் பக்தியை செலுத்தி வேண்டிக் கொள்கிறோம். ஒரு நண்பனுக்கு பணமோ / பொருளோ கொடுக்கும் போது, அவர் கட்டாயமாக தக்க சமயத்தில் திருப்பிக் கொடுத்து விடுவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதனால் பக்திக்கு ஆதாரமோ விளக்கச்சான்றோ எதுவுமில்லை; ஆனால் நம்பிக்கை, ஒருமைப்பாடு மற்றும் சக்தியை சார்ந்துள்ளது.
பல சமயங்களில், பக்திக்கு மாறாக நம்பிக்கை என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு, கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும் போது, நம்மில் பலர் “நான் கடவுளை நம்புகிறேன். அவர் பாதங்களில் சரணடைந்து விட்டேன்” என்று கூறி, தொடர்ந்து கவலைப் படுகிறோம். ஏன்? ஏனென்றால் உண்மையில் நமக்கு பக்தி இருக்கிறது; ஆனால் பிரச்சனை சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இல்லை.
மலைகள் ஏறுபவரின் கதை ஒன்று இங்கு சொல்லப் பட்டிருக்கிறது. ஒரு முறை, மலை ஏறும் போது, அவன் துணைக்கருவி எல்லாவற்றையும் அணிந்து கொண்டு உச்சிக்கு செல்ல முற்பட்டான். அவன் ஏற ஆரம்பிக்கும் போது, செல்வதற்கான பாதையை கண்டறிய முழு நிலவு அவனுக்கு உதவியது. உச்சிக்கு அருகில் அவன் சென்ற போது, எதிர்பாராமல் பனிப் புயல் அடித்ததனால், மலைகளுக்கு நடுவில் கரு மேகங்கள் வந்தன. சில நிமிடங்களில் அடர்ந்த மேகங்களும், மூடுபனியும் அவனை சூழ்ந்தது.
புயல் காற்று அடங்கி விடும் என்ற நம்பிக்கையில் அவன் விரைவாக கீழே வர ஆரம்பித்தான். கும்மிருட்டில், ஒரு குறுக்கு பாதை வழியாக வரும் போது, ஏதோ ஒரு செங்குத்தான பாறையின் உச்சியிலிருந்து சற்று சறுக்கியது. அவனைச் சுற்றி ஒன்றுமே அவனுக்கு தெரியவில்லை. அவன் கயிற்றில் ஆதாரமில்லாமல் தொங்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்தான். மன வேதனையில், “கடவுளே, எனக்கு உதவுங்கள்!” என்று அவன் அலறினான்.
திடீரென, மேலிருந்து ஒரு உறுதியான குரல் “கயிற்றை அறுத்து விடு” என்று கேட்டது.
“என்ன?!” என்றான்.
மறுபடியும் அதே குரல், “கயிற்றை அறுத்து விடு” என்று கேட்டது.
உண்மையான சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல், கயிற்றில் தொங்குவதே நல்லது என நினைத்தான். அப்படி செய்த போது, ஏதாவது ஒரு பிடிப்பு கிடைத்தால், ஜாக்கிரதையாக தப்பித்து விடலாம் என்று நினைத்தான்.
அடுத்த நாள், அவனை தேட வந்த குழு அவனை குளிர் பனியில், கயிற்றில் தொங்கியவாறே மரணம் அடைந்ததை கண்டார்கள். நிலத்திலிருந்து எட்டு அடிக்கு மேல் தான் தொங்கிக் கொண்டிருந்தான்.
அந்தக் குரலை நம்பி, கயிறை வெட்டியிருந்தால், அவன் பிழைத்திருப்பான். கடவுள் மேல் பக்தி இருந்ததனால் கூப்பிட்டான்; ஆனால் குரலின் மேல் நம்பிக்கை இல்லை.
பக்தியை செயலில் காட்டுவது தான் “நம்பிக்கை”. அது பக்தியை, எண்ணங்கள் மற்றும் செயல்கள் மூலம் வெளிப்படுத்துகிறது.
பக்தி “இது நடக்கலாம்” என்று சொல்கிறது. நம்பிக்கை “இது நடக்கும்” என்று கூறுகிறது.
நீதி:
இந்த விபத்தைப் பற்றிய கதையிலிருந்து, நாம் கடவுளை எப்படி நம்ப வேண்டும் எனக் கற்றுக் கொள்கிறோம். அந்தக் கயிறு நமக்கு பாதுகாப்பு அளிக்கும் என நம்புகிறோமா? அல்லது, நம் அறிவு மற்றும் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு, கடவுளை நம்ப தயாராக இருக்கிறோமா? வாழ்க்கையை கணிக்க முடியாது. செல்லும் பாதையில் ஏற்றங்களும், தாழ்வுகளும் இருக்கும். நம்மில் பலர், கடவுளை நம்ப வேண்டும் என நினைக்கிறோம். நேரம் நன்றாக இருக்கும் போது, அவரை நம்புவது சுலபமாக இருக்கலாம். கஷ்டங்கள் வரும் போது, கட்டாயமாக கடவுளை நம்ப வேண்டும். நிலையற்ற மற்றும் எதிர்பாராத நேரங்களில், கடவுளின் மாறாத குணம் நமக்கு தைரியம் மற்றும் பலத்தை அளிக்கும்.
ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்:
“நான் உன் வலது கையை பிடித்துக் கொண்டு, கவலைப் படாதே என்று அபயக்கரம் கொடுக்கும் உன் கடவுள்; உன் தலைவன்” – இசையா 41:13.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE