நீதி – நன் நடத்தை / தர்மம்
உபநீதி – தக்க சமயத்தில் உதவி
ஓர் ஊரில் அதிக செல்வாக்குள்ள மனிதன் ஒருவன் இருந்தான். அவன் கஞ்சனாக இருந்ததனால், அனைத்து கிராமவாசிகளுக்கும் அவனை பிடிக்கவில்லை.
அவர்களின் மனப்போக்கைக் கண்டு அவன் வேதனையுற்றான். ஒரு நாள் கிராம வாசிகளிடம், “நீங்கள் எல்லோரும் என்னைக் கண்டு பொறாமைப் படுகிறீர்கள். பணத்தின் மேல் எனக்கு இருக்கும் பற்று உங்களுக்குப் புரியவில்லை, கடவுளுக்குத் தான் தெரியும். உங்களுக்கு என் மேல் இருக்கும் வெறுப்பு நன்றாக புரிகின்றது. நான் இறக்கும் பொழுது அனைத்து செல்வத்தையும் தான தர்மத்திற்கே உயிலில் எழுதி வைப்பேன். பிறகு எல்லோரும் சந்தோஷப் படுவீர்கள்” எனக் கூறினான்.
பிறகும் கிராம வாசிகள் அவனை ஏளனப் படுத்தினர். வேதனையோடு பணக்காரர் சொன்ன வார்த்தைகள், “உங்களுக்கு என்ன ஆயிற்று? உங்களால் சில வருடங்கள் கூட பொறுமையாக இருக்க முடியாதா?” ஆனால் கிராமவாசிகள் நம்பவில்லை. அதற்குப் பணக்காரன் “நான் என்ன சாசுவதமா? எல்லோரையும் போல் எனக்கும் மரணம் ஏற்படும். பிறகு என் பணமெல்லாம் மற்றவர்களுக்கு பயன்படும்” எனக் கூறினான். மக்களின் மனோபாவத்தைப் பார்த்து திகைப்புற்றான்.
மறுநாள் பணக்காரன் வெளியே உலாவச் சென்றான். பலத்த மழை பெய்ந்ததனால், ஒரு மரத்தடியே தஞ்சம் புகுந்தான். அங்கு ஒரு பசுவும், பன்றியும் பேசுவதை ஒட்டுக் கேட்டான்.
பன்றி பசுவைப் பார்த்து, “எல்லோரும் உன்னைப் பாராட்டுகின்றார்கள். ஆனால் என்னை எவருமே விரும்புவதில்லை. நான் இறந்த பிறகு எல்லோருக்கும் இறைச்சி கொடுக்கின்றேன். என் முட்களையும், முடியினையையும் கூட உபயோகப் படுத்துகின்றனர். நான் இவ்வளவு கொடுக்கும் போது நீ வெறும் பால் மட்டுமே தருகின்றாய். பிறகு ஏன் என்னைவிட உன்னைப் புகழ்கிறார்கள்?” என்று கேட்டது.
அதற்கு பசு, “நான் உயிருடன் இருக்கும் போது பால் தருகின்றேன். ஆனால் நீ இறந்தப் பிறகு தான் எல்லாம் கொடுக்கின்றாய். மக்கள் எதிர்காலத்தை நம்புவதில்லை. நிகழ்காலத்தைப் பற்றி தான் கவலைப் படுகின்றார்கள். நீ உயிரோடு இருக்கும் பொழுது கொடுத்தால் புகழ் கிடைக்கும்” என்று பதிலளித்தது. அதைக் கேட்ட பிறகு, பணக்காரன் தாராள மனப்பான்மை கொண்டு ஏழைகளுக்கு தான தர்மம் செய்ய ஆரம்பித்தான்.
நீதி:
நாம் நன்றாக இருக்கும் போது, எல்லோருக்கும் கொடுத்து உதவ வேண்டும். அப்படி செய்தால், நமக்கும் ஆனந்தம்; மற்றவர்களுக்கும் அது உதவியாக இருக்கும்.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
சிறு உதவி ஆனாலும் தக்க சமயத்தில் செய்ய வேண்டும். அதுவே உலகத்தில் மிகப் பெரியது. உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம். அது இந்த வானத்தையும், பூமியையும் வட மிகப் பெரியது. பிறர் நமக்கு செய்த துன்பத்தை விட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்பதே நமக்கு நல்லது. பெற்ற உதவியை மறப்பவர் உய்வு அடைய முடியாது.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
http://saibalsanskaar.wordpress.com