நீதி – உண்மை, உறுதி
உபநீதி: விடாமுயற்சி, நம்பிக்கை
பெயர் தெரியாத கதாசிரியர்
டென்னசி நகரத்தில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில், ஒரு ஏழைக் குடும்பத்தில் ஒரு சிறுமி பிறந்தாள். அக்குடும்பத்தின் 22 குழந்தைகளில், 20 வதாக பிறந்த அக்குழந்தை, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே பிறந்து, பலவீனமாக இருந்தாள். அவள் உயிரோடு இருப்பதே சற்று சந்தேகமாக இருந்தது. அவளுக்கு 4 வயது இருக்கும் போது, மிகுந்த மார்சளிக் காய்ச்சலும், குடல் வழி வேதியில் நச்சேற்றமும் இருந்ததால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, இடது கால் செயலாற்ற முடியாமல் இருந்தது. அவள் இரும்பு கால் பிடிப்பி அணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். இத்தனை சோதனைகள் இருந்தும் கூட, அவளின் தாய் அவளுக்கு எச்சமயமும் உற்சாகமளித்துக் கொண்டிருந்தாள்.
இத்தகைய சூழ்நிலையில் இருந்த போதிலும், தாய் மகளை உற்சாகப்படுத்தி, வேண்டியதை வாழ்க்கையில் செய்யலாம் எனத் தாய் அவளுக்கு உறுதி அளித்தாள். நம்பிக்கை, விடாமுயற்சி, தைரியம் மற்றும் தளர்வுறாத மனப்பான்மை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று தாய் அவளிடம் கூறினாள்.
மருத்துவர்கள் நடக்கவே முடியாது என்று கூறினர். அச்சிறுமி 9 வயதாக இருந்த போது, கால் பிடிப்பியை அகற்றி விட்டு முதல் அடி எடுத்து வைத்தாள். நான்கு வருடங்களில், மருத்துவ அற்புதமாக அவள் எல்லோரையும் போல சீராக நடந்தாள். பிறகு உலகிலேயே சிறந்த பெண் ஓட்டக்காரராக இருக்க வேண்டும் என்ற வியக்கத்தக்க எண்ணம் அவளுக்கு வந்தது. இடது கால், இந்த நிலைமையில் இருந்த போது, அவளுக்கு இப்படி ஒரு எண்ணம். 13 வயதில், அவள் ஒரு பந்தயத்தில் நுழைந்து, இறுதியாக தேர்ச்சிப் பெற்றாள். ஒவ்வொரு முறையும், அவள் உயர்நிலைப் பள்ளியில், அங்கு நடைபெற்ற அனைத்து பந்தயங்களிலும் பங்கேற்றுக் கொண்டு, கடைசி இடத்தையே பெற்றாள். பந்தயங்களில் பங்கேற்க வேண்டாம் என்று எல்லோரும் அவளை கெஞ்சினர்.
எனினும், ஒரு பந்தயத்தில் சற்று முன்னேற்றம் தெரிந்தது. ஒரு நாள், அவள் பங்கேற்றுக் கொண்ட பந்தயத்தில் வெற்றி பெற்றாள். அதற்குப் பிறகு வில்மா ருடோல்ஃப் ஒவ்வொரு பந்தயத்திலும் வெற்றியாளராகத் திகழ்ந்தாள். பிறகு அவள் டென்னசி மாநில பல்கலைக்கழகத்திற்கு சென்று, எட் டெம்பில் என்ற ஒரு பயிற்சியாளரை சந்தித்தாள். அவளின் தளர்வுறாத மனப்பான்மை மற்றும் திறனையும், நம்பிக்கையையும் அவர் பார்த்தார். அவளுக்கு சிறந்த பயிற்சி கொடுத்ததால், அவள் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றாள்.
அங்கு அவள், உலகில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த சிறந்த ஓட்டக்காரரான ஜூட்டா ஹைனா என்ற பெண்மணிக்கு எதிராக போட்டியிட்டாள். அதுவரை எவருமே அவளை ஜெயித்ததில்லை. 100 மீட்டர் பந்தயத்தில் வில்மா ருடோல்ப் வெற்றி பெற்றாள். பிறகு 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் வில்மா அவளை தோற்கடித்தாள். தற்சமயம் வில்மா ஒலிம்பிக் போட்டியில், இரண்டு தங்க பதக்கங்களை ஜெயித்திருந்தாள்.
இறுதியாக, 400 மீட்டர் இடைமாற்று ஓட்டப்பந்தயம் நடந்தது. மீண்டும் இருவரும் எதிர் எதிராக பங்கேற்றனர். வில்மா குழுவில் இருந்த முதல் இரண்டு ஓட்டக்காரர்கள், கோலை ஒழுங்காக மாற்றிக் கொண்டனர். மூன்றாவது ஓட்டக்காரர், வில்மாவிடம் கோலை கொடுக்கும் சமயம், அவளுக்கு இருந்த உத்வேகத்தில் கோலை நழுவ விட்டாள். ஜூட்டா தன்னுடைய கோலை எடுத்துக் கொண்டு ஓடுவதை வில்மா கவனித்தாள். ஜூட்டாவை தோற்கடிப்பது அசாத்தியம் என்று எல்லோரும் நினைக்க, வில்மா அந்த சாதனையையும் செய்து முடித்தாள்.
வில்மா ருடோல்ஃப் ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்றாள்.
உலகத்தில் சிறந்த மனிதர்கள் என்று எவருமே இல்லை; சிறந்த சவால்கள் மட்டும் தான்…..
……சாதாரணமான மனிதர்கள் எழுந்து எதிர் கொள்ள.
நீதி:
நம்பிக்கை, விடாமுயற்சி, தைரியம் மற்றும் தளர்வுறாத மனப்பான்மையுடன் சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடிந்தால், அது ஒரு உண்மையான வரப்பிரசாதம் எனக் கூறலாம். நாம் சவால்களை எதிர்கொள்ளும் போது, அவைகளை வாய்ப்புகளாக மாற்றிக் கொண்டால், நம்முள் இருக்கும் திறமைகளை மேம்படுத்தி, வெளிப்படுத்தலாம். நம்முள் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு கொண்டால், நமக்கு இருக்கும் சவால்களை சரியான அணுகுமுறையுடன் எதிர்கொண்டு, நம் இலட்சியங்களை வெற்றிகரமாக சாதிக்கலாம்.
வாழ்க்கை கடுமையாக இருக்கும் போது, கடும் உறுதி இருப்போர் வெற்றி பெறுகின்றனர்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE