நீதி – சரியான மனப்பான்மை
உப நீதி – கண்ணியம் / பரிவு
சூஃபி கதை
ஷிராஸ் என்ற ஊரில் ஸாதி என்ற ஒருவன், தன் குழந்தைப் பருவத்தில் தன்னுடைய தந்தை மற்றும் சக உறவினர்களுடன் தொழுகை செய்தான். தினமும் இரவில் அனைவரும் கூடி, குர்ஆனிலிருந்து ஒரு பக்கம் வாசிக்கக் கேட்பர்.
அவ்வாறு ஒரு நாள், அவனுடைய மாமா குர்ஆன் வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கிருந்தவர்கள் பெரும்பாலானவரும் நன்றாக உறங்குவதை அவன் கண்டான்.
உடனே தன் தந்தையிடம் அவன், “இவர்களில் யாருமே நபிகள் நாயகம் சொல்வதைக் கேட்பதாகத் தெரியவில்லை. இவர்கள் எவருமே கடவுளை அடையப் போவதில்லை” என்று கூறினான்.
அதற்குத் தந்தை, “மகனே! நீ நம்பிக்கையுடன் உன் பாதையைத் தேடிச் செல். பிறர், தங்களை தானே பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் தங்களின் கனவில் இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கலாம். எவர் அறிவார்? அவர்களைப் பற்றிய தவறான, கடுமையான வார்த்தைகளை கூறுவதற்கு பதிலாக, நீயும் அவர்களுடன் சேர்ந்து உறங்கி இருக்கலாமே என்று எனக்கு தோன்றுகிறது” என்று கூறினார்.
நீதி:
ஒருவரிடம் இருக்க வேண்டிய முக்கியமான நற்குணம் பண்பும், பணிவும். நாம் ஒருவருக்கு ஒரு விஷயத்தை கூறும் பொழுது, அன்பாகவும் பணிவாகவும் கூற வேண்டும்.
நாம் எப்பொழுதும் பணிவுடன் இருக்க முடியாவிட்டாலும், நம்மால் எச்சமயமும் பணிவாகப் பேச முடியும்!! – வோல்டேர்
உனக்கு ஒருவரைப் பற்றி கடிந்து பேச வேண்டுமென்றால், அதை வாய் விட்டுப் பேசாதே. நீரின் விளிம்பில் உள்ள மணலில் எழுதிவிடு – நெப்போலியன் ஹில்.
மொழி பெயர்ப்பு:
காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி