திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்

நீதி: உண்மை

உபநீதி: நேர்மறையான அணுகுமுறை / தன்னம்பிக்கை

ஒரு உணவகத்தில் பியானோ வாசிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்ற ஒருவர்  இருந்தார். அவர் வாசிப்பதை கேட்பதற்காக பலர் அங்கு வந்தனர். ஆனால் ஒரு இரவு, ஒரு ரசிகர் அவரிடம் பியானோ வாசிப்பதற்கு பதிலாக  பாடல் பாட வேண்டும் என்று விரும்பி கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், “நான் பாடுவதில்லை” என்று கூறினார்.

ஆனால் வாடிக்கையாளர் விடாப்பிடியாக இருந்தார். அவர் உணவக உரிமையாளரிடம், “அவர் பியானோ வாசிப்பதை தொடர்ந்து கேட்டு அலுப்பாகி விட்டது. அவர் பாட வேண்டும்!” என்று கூறினார்.

உணவக உரிமையாளர் உரக்கக் குரலில் வாசிப்பாளரிடம், “நண்பா! உனக்குச் சம்பளம் வேண்டுமானால் ஒரு பாடலைப் பாடு. ரசிகர் உன்னைப் பாடச் சொல்கிறார்!” என்றார்.

அதனால் அவர் ஒரு பாடலைப் பாடினார். இதுவரை பொது இடங்களில் பாடாத பியானோ வாசிப்பவர், முதல் முறையாக பாடினார். அன்றிரவு நாட்கிங் கோல், மோனாலிசா என்ற பாட்டை அவ்வளவு அற்புதமாக பாடினார். இதுவரை எவரும் இப்படி ஒரு பாட்டை கேட்டதில்லை.

அவர் தனது வாழ்நாள் முழுவதும் பெயர் இல்லாத உணவகத்தில் பெயர் இல்லாத பியானோ வாசிப்பவராக வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் பாட வேண்டியிருந்ததால், அவர் அமெரிக்காவில் எல்லோரையும் மகிழ்விக்கும் ஒரு சிறந்த நபராக மாறினார்.

நீதி:

திறமை என்பது ஒரு நபரின் இயல்பான திறன், கற்பிக்கப்படாமலேயே ஏதாவது ஒரு விஷயத்தில் சிறந்து விளங்கும். உங்கள் திறமையை கண்டறிந்து, முழு திறனையும் வெளிக்கொணருங்கள். மகத்துவத்தை அடைவதற்கு இது சிறந்த வழியாகும்.

நம் அனைவருக்கும் சமமான திறமைகள் இல்லை, இருப்பினும் நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளது” – ரத்தன் டாடா

மொழி பெயர்ப்பு:

லக்ஷ்மி கோபாலன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment