நீதி: அன்பு / இரக்கம்
உபநீதி: நிபந்தனையற்ற அன்பு, பச்சாதாபம்
சி. எஸ். லெவிஸ், தன் புத்தகமான “ஃபோர் லவ்ஸ்” ல் கிரேக்கிய மொழியில் அன்புக்கு கொடுத்திருக்கும் விளக்கத்தை நான்கு வகைகளாக பிரிக்கிறார் – பாசம், நட்பு, தெய்வீக அன்பு மற்றும் தர்மம் அல்லது கருணை. இறுதியாக வரும் தர்மம் அல்லது கருணை தான் மிகச் சிறப்பானது, மற்றும் நிபந்தனையற்ற அன்பு எனக் கூறலாம். அதை கடவுளின் மேல் பற்று அல்லது அளவில்லா அன்பு என்றும் எல்லையற்ற முடிவிலா அன்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம். அளவில்லா அன்புக்கு சிறந்த உதாரணம் “தாயின் அன்பு”. அது கொடுப்பதற்கு மட்டுமே, பெறுவதற்கு அல்ல.
“தி ராக்” என்ற இதயபூர்வமான கதையில் நிபந்தனையற்ற அன்பைப் பற்றி ஸ்டீவ் குடியர் விவரிக்கிறார் .
http://stevegoodier.blogspot.com/
“பருவ வயதில் இருந்த ஒரு பெண்ணை கையாள முடியாத அளவிற்கு, நிலைமை மோசமாகி விட்டது. சூழ்நிலை உச்சநிலைக்கு வந்த பிறகு, திடீரென ஒரு நாள், அந்த பெண் குடித்து விட்டு வண்டியை ஓட்டியதால், அவளை காவல்காரர்கள் கைது செய்தனர். அங்கிருந்து அவளை அழைத்து வருவதற்காக, அவள் தாய் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
மறு நாள் மத்தியானம் வரை, அவர்கள் பேசிக் கொள்ளவில்லை.
அந்தப் பதற்றத்தை தாய் மிகவும் அழகாக சமாளித்தார். தாய் அவளுக்கு போர்த்தப்பட்ட ஒரு பரிசு பெட்டியைக் கொடுத்தார்.
அவள் சளைக்காமல் பரிசை திறந்த போது, உள்ளே ஒரு சிறிய பாறை இருந்தது.
அவள் கண்களை உருட்டிக் கொண்டு, “இது என்ன அம்மா?” என்று கேட்டாள்.
அதற்கு தாய், “குறிப்புகளை படித்து பார்” என்றார்.
அவள் அட்டையை மேலுறையிலிருந்து வெளியே எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.
அட்டையின் மேல் இவ்வரிகள் இருந்தன: “இந்த பாறை 200,000,000 வயதிற்கு மேற்பட்டது. நானும் உன்னை அப்படி விட்டு விட மாட்டேன். இந்த பாறையின் வயது எவ்வளவு உள்ளதோ, அவ்வளவு சமயம் நானும் உன்னுடன் இருப்பேன்” என்று கூறினார்.
தாய், “நீ இவ்வாறு செய்தால் நான் உன்னை விரும்புவேன்……. என்று கூறாமல், எச்சமயமும் நான் உன்னை நேசிப்பேன். அதில் மாற்றம் எதுவும் இருக்காது” என்று கூறுகிறார்.
உன்னதமான உதாரணம் என்னவென்றால், நிபந்தனையற்ற அன்பு ஒரு நபரையும், அவன் நடவடிக்கையையும் பிரித்து பார்க்கிறது. அவள் பெண்ணின் நடவடிக்கையை தான் கவனிக்க வேண்டும்; அவளை அல்ல என்று தாய் புரிந்து கொண்டார்.
நிபந்தனையற்ற அன்பு மிகவும் முக்கியம். நாம் உயிர் வாழ்வதற்கு உணவும், காற்றும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நிபந்தனையற்ற அன்பு. உறவுமுறைகள், குடும்பங்கள்……….நாம் எங்கு சென்றாலும் நமக்கும் வேண்டும். ஏன்? நாம் செய்யும் அனைத்து காரியங்களும் நம்மை பாதிக்கும்; நாம் வாழும் கிரகத்தையும் பாதிக்கும். அன்பில்லாமல் இருப்பதால் தான், தற்சமயம் நிலவிக் கொண்டிருக்கும் அமைதியின்மை, வன்முறை, மது அருந்துதல் அதிகரிக்கும் நிகழ்வுகள், போதைக்கு அடிமையாதல், நிரம்பி வழியும் சிறைகள் எல்லாமே இருக்கின்றன.
நிபந்தனையற்ற அன்புடன் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அன்பான மனப்பான்மை, மன்னிக்கும் குணம், மரியாதை போன்ற நற்பண்புகள் மூலம் நாம் நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தலாம். அதற்கு வாழ்க்கை நமக்கு பல வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. உலகை மாற்றுவதற்கு நம்மிடம் அளவில்லா சக்திகள் உள்ளன. நம்மைச் சுற்றி சந்தோஷத்தை பரப்ப நம்மிடம் அற்புதமான வாய்ப்புகள் உள்ளன. நாம் தங்கும் கிரகத்தையும் மற்றும் நம்மையும் மாற்றிக் கொள்ள நம்மால் முடியும். இரக்கம், பொருட்படுத்தாமல் விட்டுவிடும் மனப்பான்மை போன்ற கருவிகளை பயன்படுத்தி , தினமும் நாம் எதிர்கொள்கின்ற எதிர்மறையான விஷயங்களை சுலபமாக சந்திக்கலாம்.
நீதி:
ஈர்ப்பு விதி இங்கே ஒரு பெரிய அளவில் செயல்படுகிறது. நாம் அன்பை பகிர்ந்து கொண்டால், சுற்றுப்புறத்திலிருந்து நமக்கு அதிக அளவில் அது திரும்ப கிடைக்கும்.
“அன்பு எதுவுமே எதிர்பார்ப்பதில்லை. அதற்கு பயமும் தெரியாது. கடவுள் எதுவுமே எதிர்பார்க்காமல் அளித்துக் கொண்டே இருப்பார் . அன்பு கெடுதலை நினைக்காது; அதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அன்போடு இருப்பதின் அர்த்தம், பகிர்ந்து கொள்வதும் சேவை செய்வதும் மட்டுமே – ஸ்வாமி சிவானந்தா
ஜாதி மற்றும் மத வேறுபாடு இல்லாமல், நம் ஆழ்ந்த மனதில் அதிக அளவு அன்பு இருக்கிறது. நாம் தான் அதை ஆராய்ந்து, புரிந்து கொண்டு, உள் மனதில் இருக்கும் அன்பை வெளியே கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால், இந்த கிரகத்தில் வாழ்வதற்கு அர்த்தம் இருக்கும்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE