கர்வம் கொள்ளாதே

நீதி: உண்மை

உபநீதி: உள்ளார்ந்து நோக்குதல், பணிவு

அறிவாளிகள் சிலர் ஒன்று கூடி, கடவுள் மனிதனைப் படைக்கும் வேலையை, ஏன் கடைசி நாளான ஆறாம் நாளுக்கு தள்ளி வைத்தார் என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அதற்கு ஒருவர், “இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் முதலில் ஒழுங்கு படுத்திவிட்டால், அதன் அற்புதங்களை மனிதர்கள் அனுபவிக்கலாம் அல்லவா?”, என்று கூறினார்.

அதற்கு மற்றொருவர், “முதலில் மிருகங்களை வைத்து சோதனை செய்து விட்டால், மனிதர்களைப் படைக்கும் போது தவறுகள் நிகழாமல் இருப்பதற்காக”, என்று வாதாடினார்.

ஒரு யூத ஞானி அப்போது அங்கு வந்தார்.

அவரிடம் அவர்கள் தங்கள் கலந்துரையாடலின் கருத்தைக் கூறிவிட்டு, “உங்கள் பார்வையில் கடவுள் மனிதனை ஏன் கடைசி நாளன்று படைத்தார்” என்று கேட்டனர்.

“இது ஒரு சாதாரண விஷயம்”, என்று கூறிய அந்த ஞானி, “எப்பொழுதெல்லாம் நாம் கர்வத்தால் செயற்படுகிறோமோ, அப்பொழுதெல்லாம் கடவுளின் அற்புதப் படைப்பில் ஒரு கொசுவுக்குக் கூட அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை நாம் உணர்வதற்காக”, என்று கூறினார்.

நீதி:

“எனக்கு எல்லாம் தெரியும்” என்ற அகந்தையை(கர்வத்தை) விட்டுவிட்டு, நாம் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினால், அது நம்மை பல மடங்கு உயர்ந்த நிலைமைக்கு அழைத்துச் செல்லும். அதுவே, சுயபரிசோதனை செய்து கொண்டு, எச்சரிக்கையுடன் கூடிய அடக்கத்தோடு நடந்து கொள்ள பழக்கப்படுத்தும். இதனால் நாம் எந்த ஒரு விஷயத்தையும் பணிவுடன் அணுகத் தொடங்குவோம். இறுதியில் நாம் பண்பட்ட மனிதர்களாக மாறுவோம்.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment