மண் பானை

நீதி: உண்மை

உபநீதி: பணிவு, நன்றியுணர்வு

ஒரு குயவனிடத்தில் பல விதமான உருவங்களில் மண்பாண்டங்கள் இருக்கும் – பானை, ஜாடி, கிண்ணம், தட்டு முதலியவை; ஆனால் அனைத்துமே களி மண்ணால் செய்யப்பட்டவையே. அதே போல் தான் கடவுளும். பல காலமாக பல்வேறு பெயர்களிலும் அம்சங்களிலும் அவரை நாம் வணங்குகிறோம்ராமகிருஷ்ணர்.

குரு உபயோகிப்பதற்கு ஒரு பாத்திரத்தைத் தேடிக் கொண்டிருந்தார்;

அலமாரியில் பல வகைகள் இருந்தன. அவற்றில் அவர் எதைத் தேர்ந்தெடுப்பார்?

தங்கத்தால் செய்யப்பட்ட பானை –

“என்னை எடுத்துக் கொள்ளுங்கள்”

நான் மிகவும் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருக்கிறேன்.

மிகவும் விலை உயர்ந்தவன். எல்லாவற்றையும் சரியாகச் செய்பவன்.

என் அழகும் ஒளிர்வும் மற்ற பானைகளை விட உயர்ந்தது.

உங்களைப் போன்ற ஒரு உயர்ந்தவருக்கு, தங்கம் தான் சரியானது” என்று கூறியது.

குரு எதுவும் பேசாமல் நகர்ந்தார்.

அவர் குறுகலாகவும் உயரமாகவும், வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு தாழியைக் கண்டார்.

அது “குருவே நான் உங்களுக்கு சேவை செய்வேன். நீங்கள் அருந்தும் பானத்தை நான் தருவேன்.

நீங்கள் உணவு உண்ணும் போதெல்லாம் உங்கள் மேஜை மேல் இருப்பேன்.

எனது கோடுகள் மிகவும் அழகானவை. என் மீது செதுக்கப்பட்டவை உண்மையானவை.

எனது வெள்ளி, தங்களுக்கு எப்பொழுதும் புகழ் சேர்க்கும்” என்றது.

அதைப் புறக்கணித்துவிட்டு குரு, பித்தளை உருளியிடம் சென்றார்.

அதன் வாய் அகலமானதாகவும், ஆழம் குறைவானதாகவும் இருந்தது; ஆனால், கண்ணாடியைப் போல அது பளபளப்பாக இருந்தது.

அது அவரை அருகில் வரும்படி அழைத்தது. பிறகு, “என்னால் செய்ய முடியும் என்பதை நான் அறிவேன். எல்லோரும் பார்க்கும் படியாக என்னை உங்கள் மேஜை மேல் வையுங்கள்” என்றது.

அடுத்து, சுத்தமான கண்ணாடியால் ஆன ஒரு கோப்பை அவரை அழைத்தது. அது “என்னைப் பாருங்கள்! என்னிடத்தில் உள்ளவற்றை தெளிவாக நீங்கள் பார்க்க முடிகிறது.

நான் எளிதில் உடையக் கூடியவன் என்றாலும், பெருமையுடன் உங்களுக்கு சேவை செய்வேன்.

உங்கள் இல்லத்தில் எல்லாவற்றையும் சந்தோஷமாக பின்பற்றுவேன் என்று நம்புகிறேன்” என்று கூறியது.

அடுத்ததாக குரு மரத்தாலான ஒரு பாத்திரத்திடம் வந்தார்.

அது நன்கு இழைக்கப்பட்டு, நேர்த்தியான வேலைப்பாட்டுடன் உறுதியாக நின்றது.

அது “நீங்கள் என்னை உபயோகப்படுத்தலாம் குருவே.

ஆனால் நீங்கள் ரொட்டிக்கு பதிலாக பழம் வைக்க என்னை உபயோகப்படுத்தலாம்” என்று கூறியது.

பிறகு குரு கீழே இருந்த ஒரு களிமண் குவளையைக் கண்டார். அது வெறுமையாகவும் உடைந்தும் பரிதாபமாகக் கீழே கிடந்தது. குரு தன்னைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தி, சரி செய்து, நிரப்பி உபயோகப்படுத்துவார் என்ற எந்த நம்பிக்கையும் இல்லாமல் அது இருந்தது.

“ஆஹா! இதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்.

இதை சரிசெய்து உபயோகப்படுத்தி என்னுடையதாக்கிக் கொள்வேன்.

எனக்கு, தற்பெருமை உடையதோ;

அலமாரியில் குறுகலாக அமர்ந்து இருப்பதோ;

அல்லது வாய் அகன்ற ஆழமில்லாததோ;

அல்லது தனது பெருமையை பறைசாற்றிக் கொள்வதோ;

அல்லது எல்லாவற்றையும் சரியாக செய்வேன் என்ற அகந்தை உடைய பாத்திரமோ தேவையில்லை.

என்னுடைய சக்தியும் வலிமையும் நிறைந்த இந்த சாதாரண மண் பாத்திரமே போதும்” என்றார்.

பிறகு அதை மெதுவாக எடுத்து சரி செய்து, சுத்தப்படுத்தி, நிரப்பி வைத்தார். அதனிடம் அன்பாக,” நீ செய்ய வேண்டிய ஒரு வேலை இருக்கிறது. நான் உனக்குக் கொடுத்து நிரப்புவது போல, நீயும் மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுத்து உதவ வேண்டும்” என்றார்.

நீதி:

நாம் எப்போதும் நமக்குக் கிடைத்துள்ள பாக்கியங்களையே எண்ண வேண்டும். மேலும் அவற்றிற்காக  நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். நம் வாழ்க்கையில் கடவுள் நமக்கு மேலும் பல பாக்கியங்களை வழங்கத் தயாராக இருக்கிறார். நாம் அதை உணர்ந்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நமது உடைமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவைகளை விட்டால்தான் அவர் அளிக்கும் பாக்கியங்களை  வாங்கிக் கொள்ள, தேவையான இடம் நமக்குள் உண்டாகும். அப்போதுதான் நாம் முழுமை அடைந்து, நிறைந்தவர்கள் ஆக முடியும்.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment