நீதி: உண்மை
உப நீதி: ஏற்றுக் கொள்ளுதல், விழிப்புணர்வு
புத்தர் முதன் முதலில் அறிவொளி அடைந்த போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி “நீங்கள் கடவுளா?”
அதற்கு அவர் “இல்லை” என்று பதிலளித்தார்.
பிறகு வந்த கேள்வி “நீங்கள் முனிவரா?”
அவர் “இல்லை” என்றார்.
“பிறகு நீங்கள் என்ன?” என்ற கேள்விக்கு,
அவர் “நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதில் கூறினார்.
புத்தர் “நீங்கள் கடவுளா?” என்ற கேள்விக்கு உறுதியாக பதில் அளிக்காத காரணம், கேள்வி கேட்டவருக்கு கடவுள் என்ற வார்த்தைக்குப் பொருளும், கடவுளைப் பற்றிய ஒரு கருத்தும் இருந்தது; அப்படியென்றால் அது கடவுளாக இருக்க முடியாது.
கடவுளைப் பற்றி அவன் உணர்ந்து கொள்வதற்காக, புத்தர் அவனுக்கு ஒரு குறிப்பு கொடுத்தார்.
நீதி:
ஒவ்வொரு நிமிடமும் விழிப்புணர்வுடன் இருப்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டும். நம்மால், ஒருவரை நம்மிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியும் போது, வேற்றுமை உருவாகிறது.
அறிவார்ந்த புத்தர், கடவுள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார் என்றும், விழிப்புணர்வு என்பது மாயைக்கு அப்பாற்பட்டு கடவுளை அறிவது என்றும் மிக அழகாக விவரிக்கிறார். அறிவொளி என்பது “அறியாமை என்ற உறக்கத்திலிருந்து விழிப்பதாகும்”.
மொழி பெயர்ப்பு,
அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE